சோளக் கதிர் சிவந்தாட, கிளிகளைத் துரத்தியே,
பொன்வண்டை பிடிக்கவே, முல்மரங்கள் ஏறியே,
பனங்காய் சக்கரதில், வண்டிகள் செய்தே,
பனம்பழம் எடுத்திடவே, அதிகாலையில் விழித்தே,
கார்த்திகை வந்துவிட்டால், காளான் தேடியே,
மார்கழிக் குளிரிலே, அடுப்படியில் காய்ந்தே,
பங்குனி வெப்பத்தில், கிணறில் நீந்தியே,
சித்திரைக் கார்மழைக்கு, மண்வாசம் ரசித்தே,
இத்துனை ஆண்டுகள் என் கிராமத்தின் அணைப்பில்
என் பிள்ளைப்பருவம் இனிதே கழிந்தது
No comments:
Post a Comment